சென்னை: விராலிமலை ஜல்லிக் கட்டுப் போட்டியில் 2,000 காளை களை பங்கேற்கச் செய்து உலக சாதனை படைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து உலக சாதனை மதிப்பீட்டாளர்கள் விராலிமலைக்கு வரவுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன் னிட்டுத் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைப் பட்ட மரத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறு கிறது. இதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்துள்ளது. கடந்தாண்டு விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 805 காளைகள் மட்டுமே பங்கு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2000 காளைகள் பங்குபெறும் நிலையில் அதனை நேரில் பார்வையிட்டு மதிப்பிடுவதற்காக உலக சாதனை அமைப்பினர் விராலிமலை வரவுள் ளனர். இதற்கிடையே வாடிவாசல் அமைக்கும் பணி, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் மாடம் அமைக்கும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டு; உலக சாதனைக்கு ஆயத்தம்
13 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!