பயங்கரவாதம், இணையக் குற்றம், எல்லை தாண்டிய குற்றம் போன்ற வை தமது அமைச்சின் முக்கிய சவால்கள் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் குறிப் பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நாடா ளுமன்றத்தில் அதிபர் டோனி டான் கெங் யாம் ஆற்றிய உரைக்கு உள்துறை அமைச்சின் பிற் சேர்க்கையை அமைச்சர் சண்முகம் நேற்று வெளியிட்டார். தேசிய பாதுகாப்பு அம்சங்களைக் கவனிக்கும் மூன்று அமைச்சு களும் அரசாங்க அமைப்பும் பாதுகாப்புத் திட்டங்களை வகுத்து உள்ளன.
தொழில்நுட்பத்தை சிறந்த முறை யில் பயன்படுத்துதல், நெருக்கடி அல்லது பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றைச் சமாளிக்கும் திறன்களையும் தயார்நிலையையும் பொதுமக்களிடையே வலுப்படுத்து தல் போன்றவை அத்திட்டங்களின் முக்கிய கருப்பொருள்கள். உள்துறை அமைச்சின் திட்டங் களை விவரித்த அமைச்சர் சண் முகம், "புதிதாக வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள சிங்கப் பூர் தமது முயற்சிகளை மேம்படுத் தும்," என்றார்.