பினாங்கு பாலத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்த கார் ஓட்டுநரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 வயது மாணவர் மோய் யுன் பெங் ஓட்டிக்கொண்டிருந்த வெள்ளை நிற கார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.54 மணிக்கு பினாங்கு பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு காருடன் மோதி பாலத்திற்கு வெளியே தள்ளப்பட்டது.
வெள்ளை நிற காருடன் மோதிய கறுப்பு நிற காரின் ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டிருந்ததாக போலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்தது. அவரும் மோய்யும் தங்களது நண்பரின் -பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஜார்ஜ்டவுனில் சூலியா ஸ்திரீட்டிலுள்ள கேளிக்கை கூடத்திற்குச் சென்றிருந்தனர்.
முக்குளிப்பாளர்கள் உணர்கருவிகளைக் கொண்டு, நீருக்குள் மூழ்கிய காரின் சிதைவுகளைக் கண்டுபிடித்ததாக பினாங்கின் தீயணைப்புத் துறை தெரிவித்தது.