ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தென்சுலாவேசியில் உள்ள அணைக்கட்டை மீறி கரை புரண் டோடிய ஆற்று நீரால் குறைந்தது 30 பேர் மாண்டனர்.
25 பேரைக் காணவில்லை என்று இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரைபுரண்டோடிய ஆற்று நீர் காரணமாக அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்திலிருந்து தப்பிக்க தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறிய மக்களுக்காக இந்தோனீசியாவின் இயற்கை பேரிடர் துயர் துடைப்பு அமைப்பு நிவாரண முகாம்களை அமைத் துள்ளது.
வெள்ளம் காரணமாக தென் சுலாவேசி பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தலைநகர் மக்காஸ்சாரும் பாதிப்படைந் துள்ளது.
பல வீடுகளை வெள்ளம் அடித்துக்கொண்டு சென்றுவிட்ட தாக அதிகாரிகள் கூறினர்.
"இதுவரை தண்ணீரில் மூழ்கி அல்லது கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி புதையுண்டு அல்லது பிலி=பிலி அணைக்கட்டை மீறி நீர் கரைபுரண்டு ஒடி ஏறத்தாழ 30 பேர் மாண்டுவிட்டனர்," என்று துயர் துடைப்பு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ள நீர் காரணமாகப் பிரதான நெடுஞ்சாலை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.
அதில் வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தினால் மக்க ளுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படுவதாக இந்தோனீசிய ஊடகம் தெரிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி
கரைபுரண்டோடிய நீரால் பலர் மரணம்
25 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!