பயங்கரவாத அச்சுறுத்தல் விழிப்புணர்வு அதிகரிப்பு

எஸ்ஜிசெக்யூர் பற்றிய விழிப்பு உணர்வை அதிகரிப்பதில் கடந்த ஈராண்டுகளில் நல்ல முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வது என்பது தனக் குத் தெரியும் என்று அதிகமான சிங்கப்பூரர்கள் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார். நான்கில் மூன்று சிங்கப்பூரர் கள் எஸ்ஜிசெக்யூர் குறித்து அறிந்துள்ளனர் என்றும் உத விக்கு முன்வரும் வகையில் மக் களைத் தயார்ப்படுத்த இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு சண்முகம் சொன்னார். "விழிப்புணர்வு கொண்டிருப்ப வர்களாக மட்டுமின்றி செயலில் இறங்கவும் மக்களைக் கடப்பாடு கொண்டவர்களாக ஆக்குவதே நோக்கம்," என்றார் அவர்.

பொதுமக்களிடையே பயங்கர வாத அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டில் அதிக அளவிலான 'எஸ்ஜிசெக்யூர்' நிகழ்ச்சிகள் கடைத்தொகுதிகளி லும் தனியார் கூட்டுரிமை வீடு களிலும் நடத்தப்படவுள்ளன. அவசரகால ஆயத்தங்களுக் கான ஒத்துழைப்பு தொடர்பான சமூக நடவடிக்கை வட்ட மேசை கலந்துரையாடல்களில் ஐந்து தொகுதிகளைச் சேர்ந்த அடித் தள அமைப்புகள், சமூக, சமய அமைப்புகள், வர்த்தகங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் தலை வர்கள் பங்குகொள்வர். முன் னோடித் திட்டமாக இது இடம் பெறும். மருத்துவ உதவி தேவைப்பட் டால் அல்லது சிறிய அளவிலான தீ விபத்துகளின்போது உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள வர்களை விழிப்பூட்ட சிங்கப்பூரர் களுக்கு உதவும் 'மைரெஸ் பாண்டர்' கைபேசிச் செயலி, 'எஸ்ஜிசெக்யூர்' செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!