விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்கக் கோரி மதுரபாக்கத்தில் உள்ள துணைமின்நிலையத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் திருஞானசம்பந்தத்திடம் விண்ணப்ப மனு கொடுத்திருந்தார்.
அப்போது அவர் ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று கூறினார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத வீராசாமி விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலிசில் புகார் செய்தார். காவல்துறையினரின் அறிவுரைப்படி வீராசாமி லஞ்சப் பணத்தை ரூ.500 மின்வாரிய அதிகாரி திருஞானசம்பந்தத்திடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு காவல்துறையினர் திருஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி பிரியா வழக்கை விசாரித்தார். லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருஞானசம்பந்தத்துக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!