ஜோகூர்பாரு: கோத்தா திங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் இஸானுதின் முகம்மது ஹருன் தன் மீது சாட்டப்பட்ட இரு குற்றச் சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
அவர் 2013, 2014ஆம் ஆண்டு களில் ஓர் அச்சிடும் நிறுவனத்திடமிருந்து 50,000 ரிங்கிட் ரொக்கத்தையும் ஒரு துண்டு நிலத்தையும் லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலாவது குற்றச்சாட்டில், 2013 செப்டம்பர் 8ஆம் தேதி நூர் இஸானுதின் கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனத்தில் (பெல்டாவில்) ஒரு இயக்குநராக இருந்தபோது கார்யா ஹிடாயா பெர்ஹாத் நிறுவனத்திடமிருந்து 50,000 ரிங்கிட் வாங்கினார் எனக் கூறப்பட்டது. அந்தப் பணம் அவருடைய வங்கிக் கணக்கில் போடப்பட்டதாக நீதிமன்றத் தகவல் கூறியது.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி அவர், அதே நிறுவனத்திடமிருந்து கோத்தா திங்கியில், 180,000 ரிங்கிட் மதிப்புள்ள 0.421 ஹெக்டர் நிலத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப் படுகிறது. பெல்டாவின் அச்சிடும் வேலைகளைச் செய்து கொடுக்கும் குத்தகையைப் பெறு வதற்காக அந்நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் 40,000 ரிங்கிட் பிணையில் நூர் இஸானுதினை விடுவித்தது. வழக்கு மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் விசானைக்கு வரும்.
குற்றச்சாட்டுகளை மறுத்த கோத்தா திங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
11 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!