தலைக்கவசத்துடன் போலிஸ் மாயம்

சென்னை: இரவலாகக் கொடுத்த தலைக்கவசத்தை திருப்பிக் கொடுக்காமல் போலிசாரே எடுத்துச் சென்றது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நேற்று முன்தினம் திருவெறும்பூர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவும், இருசக்கர பேரணியும் நடைபெற்றது. இதில் அந்நிறுவன ஊழியர்களும் காவல்துறையினரும் மட்டும் பங்கேற்றனர். இந்நிலையில் பேரணியில் பங்கேற்க வந்த 8 காவலர்களிடம் தலைக்கவசம் இல்லை. இதையடுத்து அந்நிறுவனம் அவர்களுக்கு தலைக்கவசங்களை இரவலாகத் தந்தது. ஆனால் பேரணி முடிந்த பின்னர் 8 காவலர்களும் தலைக்கவசத்தைத் திருப்பிக் கொடுக்காமல் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஒலிப்பெருக்கியில் பலமுறை அறிவித்தும், 8 பேரும் கண்டுகொள்ளவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.4,800 என்றும், தன் சம்பளத்தில் அத்தொகை வெட்டப்படும் என்றும் தனியார் நிறுவன ஊழியர் வேதனையுடன் குறிப்பிட்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!