சென்னை: இரவலாகக் கொடுத்த தலைக்கவசத்தை திருப்பிக் கொடுக்காமல் போலிசாரே எடுத்துச் சென்றது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நேற்று முன்தினம் திருவெறும்பூர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவும், இருசக்கர பேரணியும் நடைபெற்றது. இதில் அந்நிறுவன ஊழியர்களும் காவல்துறையினரும் மட்டும் பங்கேற்றனர். இந்நிலையில் பேரணியில் பங்கேற்க வந்த 8 காவலர்களிடம் தலைக்கவசம் இல்லை. இதையடுத்து அந்நிறுவனம் அவர்களுக்கு தலைக்கவசங்களை இரவலாகத் தந்தது. ஆனால் பேரணி முடிந்த பின்னர் 8 காவலர்களும் தலைக்கவசத்தைத் திருப்பிக் கொடுக்காமல் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஒலிப்பெருக்கியில் பலமுறை அறிவித்தும், 8 பேரும் கண்டுகொள்ளவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.4,800 என்றும், தன் சம்பளத்தில் அத்தொகை வெட்டப்படும் என்றும் தனியார் நிறுவன ஊழியர் வேதனையுடன் குறிப்பிட்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைக்கவசத்துடன் போலிஸ் மாயம்
12 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2019 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!