கல்வி முறை மேம்பாட்டில் ஆயுள் கல்வியும் இலக்கு

சிங்கப்பூரில் கல்வி முறையை மேம்படுத்தும் தன் முயற்சிகளில் மூன்றாவது அம்சமாக ஆயுள் கல்வியைச் சேர்க்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் சிங்கப்பூரர்கள் புதுப்புது தேர்ச்சிகளையும் ஆற்றல்களை யும் கற்றுக்கொள்வதை உறுதிப்படுத்து வது இதன் நோக்கம். கல்வி முறை மேம்பாட்டில் ஏற்கெனவே இரண்டு நட வடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான தேர்வுச் சுமை யைக் குறைப்பது அவற்றில் ஒன்று.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவ பல அமைப்புகளை உள்ளடக்கும் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைப்பது மற் றொரு நடவடிக்கை.
கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று செங்காங் மத்திய பகுதிக்குச் சமூக சுற்றுலா மேற்கொண்டார். அதனையொட்டி இந்த விவரங்களை அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி முறை மேம்பாட்டில் இடம் பெறும் புதிய அம்சம், மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அது பல ஆண்டு கால முயற்சியாகும். அதன்மூலம் கல்வி முறை கணிசமாக மேம்படும் என்று தெரிவித்த அமைச்சர், இன்று திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ததற்குப் பிறகு மேல் தகவல்கள் பலவும் வெளியிடப்படும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!