சென்னை: புதிய தமிழகத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட முன்வந்தால் வாய்ப்பளிக்கப்படும் என அக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கட்சி சார்பில் மட்டுமல்லாமல் மற்றவர்களும் தேர்தலில் போட்டியிட விரும்பினால் விருப்ப மனுவைப் பெறலாம் என்றார்.
விருப்ப மனுவுக்கான விண் ணப்பத்தொகை 10 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள தாகவும், மனு அளித்தவர்களிடம் சென்னையில் மார்ச் 7ஆம் தேதிக்குப் பிறகு நேர்காணல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று முன் தினம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்ய முதல்வர் கெஜ்ரி வாலுக்கு கமல் அழைப்பு விடுத்த தாகவும், அவருடன் அரை மணி நேரம் பேசியதாகவும் கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்துச் செய்தியாளர்க ளிடம் பேசிய கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டது முதல் கெஜ்ரிவால் தொடர்ந்து ஆதரவளித்து வருதாகக் குறிப் பிட்டார்.
"தேர்தல் சமயத்திலும் அவரது ஆதரவு குறித்து நினைவூட்ட வந்தேன். இம்முறை ஆம் ஆத்மி தமிழகத்தில் போட்டியிடவில்லை. எனினும் அவர்கள் சார்பாக போட்டியிடும் எங்களை ஆதரிப் பர்," என்றார் கமல்ஹாசன்.
தேவைப்பட்டால் நாடாளு மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயார் என்றும், மற்றொரு பக்கம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"எல்லோருடனும் கைகுலுக்கி விட முடியாது என்பதில் உறுதி யாக உள்ளது மக்கள் நீதி மய்யம். காரணம் மக்களுக்கு உணவு பரிமாறும்போது எங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பெரும் ஆசைதான்," என்றார் கமல்ஹாசன்.
‘தேர்தலில் போட்டியிட யார் வந்தாலும் வாய்ப்பளிப்போம்’
28 Feb 2019 09:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!