கோலாலம்பூரின் ஜாலான் புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள ஓர் இரவு விடுதியை நேற்று அதிகாலை மலேசிய போலிஸ் சோதனை செய்ததில் இரு சிங்கப்பூரர்கள் பிடிபட்டனர்.
காலை 2.45 மணிக்கு நடத்தப்பட்ட இச்சோதனையில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட இரு சிங்கப்பூரர்களுடன் மேலும் இருவர் ஒரே அறையில் போதைப்பொருள் கலந்த பானங்களுடன் இருந்ததாக தலைமை போலிஸ் அதிகாரி மஸ்லான் லஸிம் கூறினார். இரவு விடுதியில் போதைப் பொருள் இருப்பதை போலிசாரின் நாய்கள் கண்டுபிடித்தன. இரவு விடுதியில் இருந்த 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 81 பேரை போலிசார் சோதித்ததாகவும் 37 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. கைதானோர் போலிஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மலேசிய இரவு விடுதியில் இரு சிங்கப்பூரர்கள் கைது
11 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2019 08:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!