மலேசியாவின் ஜோகூர் பாருவின் பாசிர் கூடாங்கில் நச்சுவாயு பிரச்சினையைச் சமாளிக்க அவசர நிலை அறிவிக்கத் தேவையில்லை நேற்று அரசாங்கம் தெரிவித்தது.
ஜோகூர் பாரு மாநில அரசு இதற்குக் கோரிக்கை விடுக்காத தால் அவசரநிலை அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் அது கூறியது.
முன்னதாக அவசரநிலை அறி விப்பது குறித்து நாடாளு மன்றத் தில் விவாதிக்கப்பட இருந் தது.
இந்த நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய பிரதமர் அலுவலக துணை அமைச்சர் முகமது ஹனிபா மைதின், அவசர நிலை தேவையில்லை என்று கூறினார்.
நெருக்கடி நிலையைச் சமா ளிக்க ஜோகூர் மாநில அரசுக்கு மத்திய அரசாங்கம் உதவி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சுங்கை கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட 2.43 டன் ரசாயனக் கழிவுகள் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘பாசிர் கூடாங் நச்சுவாயு பிரச்சினையைச் சமாளிக்க அவசரநிலை தேவையில்லை’
15 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!