சென்னை: தேர்தலில் தங்களது பலத்தைக் காட்டத் தயாராகி வரும் தொகுதிகளில் தகுந்த வாக்காளர்களை நிறுத்துவதற்கு தேமுதிக நேற்று நேர்காணல் நடத்தியது. அப்போது, தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த வர்களிடம் நேர்காணல் நடத்திய விஜயகாந்த் 'சைகை' மொழியில் கேள்வி எழுப்பியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சைகை மொழி சிலருக்கு புரிந்தும் சில வேட்பாளருக்கு புரி யாமலும் குழம்பி நின்றுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தேமுதிக வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களுக் கான நேர்காணல் சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
புதுச்சேரி உட்பட 40 தொகுதி களிலும் போட்டியிட விருப்பமனு அளித்த 300க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர்.
அவர்களை ஒரே இடத்தில் மொத்தமாக அமரவைத்து விஜய காந்த் நேர்காணல் நடத்தினார்.
தேர்தலில் நின்றால் எவ்வளவு செலவு செய்வீர்கள் என ஆள் காட்டி விரலையும் கட்டை விர லையும் காட்டி, சில்லரையைச் சுண்டுவதுபோல செய்கை காட்டி விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விருப்பமனு அளித்த வர்கள் பதில் அளித்தனர்.
மற்றபடி விஜயகாந்த் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. சில ரைப் பார்த்து விஜயகாந்த் ஏதோ ஆர்வமுடன் பேசமுயன்றார். ஆனால், விஜயகாந்த் பேசியதை புரிந்துகொள்ள முடியாமல் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைப் பார்க்கும்போது, விஜய காந்த் உடல்நலம் முழுமையாகத் தேறியதாகத் தெரியவில்லை. எனவே தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே விஜயகாந்த்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை சந்தித்துப் பேசினார். தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: இணையம்
‘சைகை’யில் பேசிய விஜயகாந்த்
15 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!