என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அரசாங்க அமைப்பு 2018ல் அமைக்கப் பட்டது. அது முதல் சுமார் 76,000 நிறுவனங்களுக்கு அது உதவி இருக்கிறது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்டுள்ள முதலாவது நிலவர அறிக்கையின் மூலம் இது தெரியவருகிறது.
உள்ளூர் நிறுவனங்கள் ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு மேம்படவும் வெளிநாடுகளில் விரிவடையவும் அந்த உதவி கிடைத்து இருக்கிறது.
புதிதாக தொடங்கப்பட்ட நிறு வனங்களுக்கு நிதி அளித்தும் ஆலோசனைகளை வழங்கியும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் உதவி உள்ளது. இந்த அமைப்பு நேற்று தனது முதலாவது வருடாந்திர மறுபரிசீலனை அறிக்கையை வெளியிட்டது.
உள்ளூர் சூழ்நிலை சவால்மிக்க தாக இருந்தாலும் இந்த அமைப்பு, உள்ளூர் நிறுவனங்களுக்கு நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது என்று இதன் தலைவர் பீட்டர் ஓங் தெரிவித்தார்.
இன்டர்நேஷனல் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் என்ற அமைப்பும் ஸ்பிரிங் சிங்கப்பூர் என்ற அமைப் பும் முன்பு செயல்பட்டு வந்தன.
இந்த இரண்டு அமைப்புகளையும் சேர்த்து என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
நிறுவனத்தின் வளர்ச்சிக் கட்டங்களுக்கு ஏற்ப செயல்திட்டங்களையும் ஆதரவு சேவைகளையும் வழங்குவது இந்த அமைப்பின் பணியாகும்.
76,000 நிறுவனங்களுக்கு உதவிக்கரம்
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!