மின்சாரத்தை துண்டித்து பணம் தரும் ஆளுங்கட்சி: எச்.ராஜா

சென்னை: மின் விநியோகத்தை வேண்டுமென்றே தடை செய்து, ஆளுங்கட்சியினர் பணப் பட்டு வாடா செய்து வருவதாக பாஜக தேசிய செயலரும் தியாகராய நகர் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தேர்தல் முடியும்வரை மின்வாரியத்தை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். வாக்களிக்க பணம் கொடுக் கும் கலாசாரத்தை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக அறிமுகப் படுத்தியதாகக் குற்றம்சாட்டிய அவர், திமுகவின் இந்த நடை முறையை முன்னெடுத்துச் செல்வ தில் இப்போது அதிமுக முதலிடத் தில் உள்ளதாக விமர்சித்தார்.

"'போடுவோம் ஓட்டு... வாங்க மாட்டோம் நோட்டு' என மக்களை உறுதிமொழி எடுக்கச் செய்து வாக்களிக்க பணம் வாங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஆனால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பணப் பட்டுவாடாவைத் தொடங்கியுள்ளன. "சென்னையில் கடந்த 10ஆம் தேதி இரவு 10 மணி முதல் 12 மணி வரை மின்தடையை ஏற்ப டுத்திவிட்டு வீடு, வீடாக ஆளுங் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். இது கண்டிக்கத் தக்கது," என்று எச்.ராஜா சாடினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!