பாசிர் கூடாங்: ஜோகூர் மாநிலத்தில் உள்ள பாசிர் கூடாங் நகரில் இருக்கும் கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவை வீசிய குற்றத்தின் பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் ஜோகூர் பாருவில் பிடிபட்டதாகவும் ஏனைய ஏழு பேர் ஜோகூர் பாருவுக்கு வெளியே கைது செய்யப்பட்டதாக வும் மலேசியப் போலிஸ் படைத் தலைவர் ஃபுசி ஹருண் தெரி வித்தார். "கைது செய்யப்பட் டோரின் வயதையும் அவர்கள் எங்கு பிடிபட்டனர் என்ற விவரத் தையும் எங்களால் வெளியிட முடியாது. அந்தத் தகவல்களை வெளியிட்டால் அது எங்களது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக்கூடும்,"என்றார் திரு ஃபுசி. கைது செய்யப்பட்ட வர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப் படுவர். அவர்களிடம் மலேசிய போலிசார் விசாரணை நடத் துவர். கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவு வீசப்பட்டதால் நச்சுவாயு காரணமாக அப்பகுதி யைச் சேர்ந்த பல பள்ளி மாண வர்கள் நோய்வாய்ப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாசிர் கூடாங் விவகாரம்: ஒன்பது பேர் கைது
19 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 09:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!