காரில் சென்று கொண்டிருந்த பெண், காரை தடம் மாற்ற முற்பட்டபோது பாதசாரி மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். காரை ஓட்டி வந்த சித்தி ஐனா மதுரி என்ற பெண்ணிற்கு 4,000 வெள்ளி அபராதமும் கார் ஓட்டு வதற்கு இரண்டாண்டு தடையும் நேற்று விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரான அப்பெண்ணின் கவனக்குறைவால் 83 வயது திருவாட்டி சான் போ குவானுக்கு மரணம் ஏற்பட்டது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6 அருகே நடந்தது. சாலையில் தடம் மாற முற்பட்ட சித்தி, திடீரென்று திருவாட்டி சான் தனது காருக்கு முன்னால் சாலையைக் கடக்க முற்படுவதைக் கண்டார். ஆனால், காருக்கும் திருவாட்டி சானிற்குமான இடைவெளி சுமார் 10 மீட்டர் மட்டுமே இருந்ததால், காரை நிறுத்த முடியாமல் அவர் மீது மோதியதைத் தொடர்ந்து சான் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
பாதசாரிக்கு மரணம் விளைவித்தவருக்கு அபராதம், தடை
13 May 2016 07:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2016 09:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!