நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து சுயநினைவிழந்த ஆடவர் ஒருவரை தகுந்த உடனடி சிகிச்சை அளித்து அவரை உயிர்பிழைக்க வைத்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதியன்று நடந்தது. நீதிமன்ற போலிஸ் பிரிவைச் சேர்ந்த 'ஸ்டேஷன் இன்ஸ்பெக் டர்'கள் குவெக் சுவானும் ஜஹபர் சாதிக்கும் தங்கள் வழக்கமான கூட்டத்தை முடித்து அறையை விட்டு வெளியே வந்துகொண்டி ருக்கும்போது நீதிமன்ற அறை ஒன்றில் 50 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டார் என்ற செய்தி அவர்களை எட்டியது.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் இருவர், அந்த ஆடவரின் முகம் வெளிறிப் போயிருந்ததையும் அவர் மூச்சு விடவில்லை என்பதையும் தெரிந்து கொண்டனர். அவர்கள் வருவதற்கு முன்பே நீதிமன்ற ஊழியர் ஒருவர் 'ஏஇடி' எனப்படும் தானியக்க வெளிப்புற மூச்சுக்கருவியைப் பயன்படுத்த தொடங்கி விட்டார். அப்போதும் ஆடவர் மூச்சு விடவில்லை.
பின்னர் அதிகாரிகள் இருவ ரும் 'சிபிஆர்' எனும் இதய இயக்க மீட்பு சிகிச்சை அளிக்க தொடங்கினர். குவெக் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுக்க, ஜஹபர் ஆடவரின் தலையை நிமிர்த்தி மூச்சுக் குழாயைத் திறந்திருப்பதை உறுதி செய்தார். சுமார் 30 நெஞ்சு அழுத்தங் களைக் கொடுத்த பின் ஆடவர் திடீரென மூச்சு விடத் தொடங் கினார். அப்போது அவரைச் சுற்றியிருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த ஆடவருக்குத் தொடர்ந்து இதய இயக்க மீட்பு சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய போலிஸ் அதிகாரிகள் குவெக் சுவான் (இடது), ஜஹபர் சாதிக் பற்றிய செய்தி சிங்கப்பூர் போலிஸ் படையின் இணையப் பக்கத்தில் வெளிவந்துள்ளது. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை