'ஸெப் பைலிங்' கட்டுமான நிறு வனத்தின் வேலையிட மேலதிகாரி ஒருவருக்கு, அங்குள்ள ஊழியர் களுக்கான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றத் தவறியதற்காக 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி கிராஞ்சி லிங்கில் உள்ள கட்டுமான இயந் திர சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆறுமுகம் இளங்கோ எனும் ஊழி யர் மரணமடைந்தார்.
விபத்துக்கு தனது கவனக் குறைவு காரணமாக இருந்தாலும் அதை மறைக்க மற்றோர் ஊழிய ரைக் குற்றத்தை ஏற்றுக்கொள்ள தூண்டியதற்காக, டே டோங் சுவான் எனும் அந்த மேலதிகாரிக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின்படி வேலை தொடர்பான முறையான அனுமதி இல்லாமலும் பாரந்தூக்கி பணித்திட்டம் இல்லாமலும் தனது ஊழியர் ஒருவரைப் பாரந்தூக்கும் பணியில் ஈடுபடுத்தியதற்காக கூடுதலாக எட்டு வாரச் சிறைத் தண்டனையும் திரு டேக்கு விதிக் கப்பட்டது.
தனது நிறுவனத்தின் வேலை யிடத்தில் முறையான பாதுகாப்பு விதிமுறைகளின்படி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யத் தவறியதற்காக 'ஸெப் பைலிங்' கட்டுமான நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி $290,000 அபராதம் விதிக்கப்பட் டது.
வேலையிடத்தில் மரணம்: மேலதிகாரிக்கு 16 வாரச் சிறை
14 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Apr 2019 10:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!