இனி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூன்றாம் பருவத்தின் தொகுப்பாளராக நயன்தாரா இடம்பெறுவதாகத் திரை ஊடகங்கள் ஊகிக்கின்றன.
கலர்ஸ் தமிழ் ஒளிவழியில் நயன்தாரா இடம்பெறப்போவதாக அந்த ஒளிவழியின் டுவிட்டர் தனது பக்கத்தில் வெளியிட்டது.
கடந்த இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளதால் அவர் நிகழ்ச்சிக்குத் திரும்பமாட்டார் எனக் கூறப்படுகிறது.