புதுடெல்லி: ராஜீவ் காந்தி ஊழல் வாதி எனக் கூறிய பிரதமர் மோடி யின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி உத்தரப் பிர தேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத் தில் பேசும்போது, "எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் என்னை குற்றம் சாட்டி வருகிறார்.
"உங்கள் தந்தை ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலை யில் அவர் தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஊழல்வாதி யாகத் திகழ்ந்தார்," என போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கைச் சுட்டிப் பேசினார்.
மேலும் பேசிய மோடி, "எனது செல்வாக்கைச் சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் நாட்டில் நிலையற்ற, பலவீனமான அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள்.
"நான் பிறக்கும்போது தங்கத் தட்டிலோ, வசதியான குடும்பத் திலோ பிறக்கவில்லை," என ராகுல் காந்தியையும் விமர்சித்துப் பேசினார்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "மோடிஜி, போர் முடிந்துவிட்டது. உங்களது முன்வினை உங்களுக் காகக் காத்திருக்கிறது.
"என் தந்தையைப் பற்றிய உங் களின் உள்நம்பிக்கைகளைப் பரப் புவது எந்தவிதத்திலும் உங்களைப் பாதுகாக்காது. உங்களுக்கு எனது அனைத்து அன்பும் ஒரு பெரிய அரவணைப்பும்," என்று பதிவிட்டுள்ளார்.
மோடியின் பேச்சிற்கு கண்ட னம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத் திய அமைச்சர் ப.சிதம்பரம், "மோடி எல்லை மீறி மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி அவதூறாகப் பேசியுள்ளார்.
"போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் காந்தி லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதார மும் இல்லை எனக் கூறி நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய் தது பற்றி மோடிக்குத் தெரியாதா.
"இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டாம் என்று முடிவெடுத்ததும் அப் போதைய பாஜக ஆட்சிதான் என் பதுகூடவா தெரியாமல் இருக்கி றார் மோடி," என்று தனது டுவிட் டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.