புதுடெல்லி: அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க நடுவர் குழுவுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப் பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய நடுவர் குழு கேட்டுக் கொண்டதன் பேரில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கி யது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குழு வின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கியது. இந்த விசாரணை ஆறு நிமிடங்கள் நடைபெற்றது. நடுவர் குழு மிகுந்த நம்பிக்கைக்கு உரியது என நீதிபதிகள் கூறினர்.