குனா: மத்தியப் பிரதேசத்தில் நேற்று வாக்குப் பதிவு நடக்க இருந்த குனா என்ற தொகுதியில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய ஏகே ஸ்ரீவக்சவ் என்ற தேர்தல் அதிகாரி, வாக்கு இயந்திரத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டதாகவும் அதிகாரிகள் தலையிட்டு அதைக் கைப்பற்றி விட்டதாகவும் மேலதிகாரிகள் கூறினர்.
ஏகே ஸ்ரீவக்சவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.