சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், பாலியல் ஒழுங்கீனங் களுக்கு எதிராக பரிந்துரைக்கப் பட்ட புதிய, கடுமையான தண்ட னைகளை உடனடியாக அமலாக்க முடிவு செய்துள்ளது.
மோசமான பாலியல் ஒழுங் கீனங்களில் ஈடுபடும் மாணவர் களை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றவும் கல்விப் பருவத்தி லிருந்து நீண்டகாலம் விலக்கி வைக்கவும் மறு ஆய்வுக்குழு பரிந் துரை செய்துள்ளது.
புதிய ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள் ஜூலையில் தொடங்குகிறது. அப்போது விசார ணைகளில் பாதிக்கப்பட்டவர் களின் கருத்துகளையும் அறிய வாய்ப்பு அளிக்கப்படும்.
நேற்று பல்கலைக்கழக மாண வர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு என்யுஎஸ் தலைவர் டான் எங் சியே மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் பல்கலைக்கழகத்தில் அமலாக்கப்படவிருக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் விவரித் திருந்தார். சில நடவடிக்கைகள் ஏற்கெனவே நடப்பில் உள்ளன.
இம்மாதத்திலிருந்து பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் முதல் முகப்பு ஊழியர்கள், மாண வர்கள் வரை முதல் உதவி பயிற்சி அளிக்கப்படும்.
பாதுகாப்பான குளியல் அறை, கழிவு அறைகளுக்கு பூட்டு, கண் காணிப்புக் கேமராக்கள், மாணவர் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் என பலதரப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கட் டம் கட்டமாக அமலாக்கவும் என்யுஎஸ் முடிவு செய்துள்ளது.
இப்பணிகள் அக்டோபரில் நிறைவடையும் என்று மின்னஞ் சலில் பேராசிரியர் டான் தெரி வித்தார்.
ஆகஸ்டு மாத இறுதியில் உளவியல் நிபுணர் தலைமையில் பாதிக்கப்பட்டோருக்கான பரா மரிப்புப் பிரிவு ஒன்று தொடங்கப் படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த ஆலோசனை, பராமரிப்பு, ஆதரவை வழங்க சட்டம், சமூகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய ஆலோ சனைக் குழு ஒன்று அமைக்கப் படும். பாலியல் ஒழுங்கீனங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தகவல்கள் அடங்கிய இணையத் தளமும் அறிமுகம் காணவிருக் கிறது.
பேராசிரியர் டான் தனது மின் அஞ்சலில் மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை பல்கலைக்கழகம் ஆராய்ந்து முடிவு செய்துள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2019-06-14 06:00:00 +0800