விஜய் சேதுபதி, அஞ்சலி ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘சிந்துபாத்’ விரைவில் வெளியாகிறது. இந்நிலையில் அந்தப் படத்தில் தனக்கு மிக யதார்த்தமான கதாபாத்திரம் அமைந்திருப்பதாக திருப்தி தெரிவித்துள்ளார் அஞ்சலி.
கதைப்படி இவர் எதையும் உரக்கப் பேசும் பெண்ணாக நடிக்க வேண்டி இருந்ததாம். இயல்பாகவே தமக்கு உரக்கப் பேசும் பழக்கம் இருப்பதால் இந்த வேடத்தில் எளிதாகவும் ஈடுபாட்டுடனும் நடிக்க முடிந்ததாகச் சொல்கிறார் அஞ்சலி.
கதைப்படி இவரைச் சிலர் கடத்திச் சென்று விடுகிறார்கள். அவர்களிடமிருந்து 36 மணி நேரத்தில் விஜய் சேதுபதி அஞ்சலியை எப்படி மீட்கிறார் என்பதை சுவாரசியமாக விவரித் துள்ளனராம்.
“இதற்கு முன்பு ‘இறைவி’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து இருந்தாலும் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது.
“காரணம் இதன் கதைக்களம் புதிது. அவரது மகன் சூர்யா சேதுபதி துருதுருவென இருப்பான். ஆனால் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசரடிப்பான். அவன் என்னை அஞ்சலி அக்கா என்று அன்புடன் அழைப்பான். ரொம்பவே பாசம் காட்டும் பையன்,” என்கிறார் அஞ்சலி.
படப்பிடிப்பின்போது இவரை கொஞ்சம் கூட ஒப்பனை செய்துகொள்ள இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அனுமதிக்கவில்லையாம். அஞ்சலி பலமுறை வற்புறுத்தியும் இருவரும் வளைந்து கொடுக்கவில்லை.
“ஊரில் இருக்கும் சாதாரண பெண் போல நான் காட்சியளிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் உடை, அலங்காரம் எல்லாமே சாதாரணமாக இருக்க வேண்டிய தாகி விட்டது. பாடல்களில் மட்டும் வேறு உடைகளில் வருவேன்,” என்று சொல் லும் அஞ்சலி சவாலான கதாபாத்தி ரங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்.
அப்படிப்பட்ட வாய்ப்புகள் தேடி வந் தால் கால்ஷீட் ஒதுக்க சிறிதளவும் தயங்க மாட்டாராம். எனினும் எத்தகைய கதை யாக இருந்தாலும், தமது உழைப்புக்குரிய சம்பளத்தைப் பெறுவதில் மட்டும் கறாராக இருக்கிறார்.
“இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சற்று காது கேளாதவராக நடித்துள்ளார். எனவே அவரைக் காதலிக்கும் நான் சத்தமாகப் பேச வேண்டும். வழக்கம் போலவே இதிலும் தனது அனாயச நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் சேதுபதி.”
பேய்க் கதைகளில் நடித்த அனுபவம் குறித்து?
“என் அம்மா என்னைத் தான் பேய் என்று சொல் வார். ஒருமுறை ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அங்கு நாங்கள் தங்கி இருந்த இடத்தில் பேய் இருப்பதாகச் சொல்லி சிலர் பயமுறுத்தினர்,” என்று சொல்லும் அஞ்சலி இதுவரை பேய்களைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகில் பேய்கள் இருக்கலாம் என்று நம்புகிறாராம்.
சரி... எப்போது திருமணம்? என்று கேட்டால், தற்போதைக்கு வாய்ப்பில்லை என்கிறார்.
“திருமணம் செய்யும்போது நிச்சயம் தெரிவிப்பேன். தமிழ்ப் பையனை திருமணம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் அஞ்சலி.2019-06-26 06:10:00 +0800