லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பங்ளாதேஷ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது மாயவித்தை நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் நியூசிலாந்தை முந்தி அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 11 புள்ளிகளைப் பெறும். நியூசிலாந்து அணி ஏற்கெனவே 11 புள்ளிகளுடன் இருப்பதால் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும். இதனால் ஓட்ட விகித அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்குச் செல்லும்.
நியூசிலாந்து அணியின் ஓட்ட விகிதம் (+0.175), பாகிஸ்தான் அணிக்கு (=0.792) உள்ளதால் அரையிறுதி வாய்ப்பு அதிகமாக நியூசிலாந்துக்கே உள்ளது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழைய வேண்டும் என்றால் பங்ளாதேஷ் அணியை அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.