பல கோடி மதிப்பிலான ஐஎம்ஏ ஊழல் வழக்கு தொடர்பிலான சிறப்பு விசாரணைக் குழு ஒன்று, மாநில அரசுக்கு எதிராக மாறிய காங்கிரஸின் ரோஷன் பெய்க்கைக் கைது செய்திருப்பதாக கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் பாஜக தலைவர் எடியூரப்பாவின் தனிப்பட்ட உதவியாளர் சந்தோஷுடன் திரு பெய்க் தனியார் விமானத்தில் மும்பைக்குப் புறப்படவிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஊழல் வழக்கை எதிர்நோக்கும் முன்னாள் அமைச்சர் தப்பிப்பதற்கு பாஜக துணை நிற்பது வருத்தத்திற்குரியது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக அரசைப் பலவீனப்படுத்த பாஜக முயல்வதை இது காட்டுவதாகவும் அவர் கூறினார். ஆனால் பாஜகவோ, திரு குமாரசாமி தற்போது ஆட்டம் காணும் தனது அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகத் திரு பெய்க்கை விசாரணை அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவதாகத் தெரிவித்தது.
இதற்கிடையே, கர்நாடகாவின் மாநில அமைவில் முதலமைச்சர் குமாரசாமியின் தலைமையிலான நிர்வாகம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற கூட்டணியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. இந்த வாக்கெடுப்பு ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.