‘ஃபேஸ்அப்’ என்ற செயலியின் மீதான மோகம் இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களது படங்களை அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்தப் படங்களில் அவர்கள் வயதானவர்களைப் போல் தோற்றமளிக்கச் செய்கிறது ‘ஃபேஸ்அப்’ .
நிழற்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் இத்தகைய செயலிகள் புதிதல்ல என்றாலும் ‘ஃபேஸ்அப்’பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் வயதாவதைக் காட்டும் படங்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரையும் வயோதிகர்களாகக் காட்டும் இந்தப் படம் இன்ஸ்டகிராமில் பிரபலமாகியுள்ளது: