தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கிரைம்வாட்ச்' குற்றக்காண்காணிப்பு நிகழ்ச்சியைப் பார்த்து அதில் வரும் காட்சியைப் போல திருடிய இளையர்கள் இருவருக்கு இன்று குறைந்தது ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சித் தண்டனை விதிக்கப்பட்டது.
16 வயது தியோஃபீலியஸ் ஜெபராஜ், 18 வயது ஜான் கரண் கருணாகரன் இருவரும் சீர்திருத்தப் பயிற்சி நிலை யத்தில் தடுத்து வைப்படுவார்கள். அவர்கள் அங்கு கட்டுப் பாடான வாழ்க்கைமுறையே மேற்கொள்வார்கள். இந்த இரு இளையர்களும் 14 வயது பையனும் சேர்ந்து பாலியல் ஊழி யர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.
தியோஃபீலியசும் ஜானும் கடந்த மாதம் 28ஆம் தேதி தங்கள் ஆயுதமேந்தி கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பெயர் குறிப்பிட முடியாத 14 வயது பையனின் குற்றம் மே மாதம் 15ஆம் தேதி நிரூபிக்கப்பட்டது. அவர் சிங்கப்பூர் பையன்கள் இல்லத்தில் இரண்டு ஆண்டு சீர்திருத்தப் பயிற்சித் தண்டனையை மேற்கொண்டு வருகிறார்.