மூட்டு அறுவை சிகிச்சையால் கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா தற்காலிக விலகல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு உள்ளார்.

இதனையடுத்து அவர் மீண்டு வர குறைந்தது 6 வார கால புனரமைப்பு சிகிச்சை, பயிற்சிகள் தேவைப்படுவதால் கிரிக்கெட்டிலிருந்து குறுகிய காலத்துக்கு விலகியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத் தலைவருமான சுரேஷ் ரெய்னாவிற்கு ஆம்ஸ்டர்டாமில் அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து சீராக குணமடைந்து வருவதாக தனது டுவிட்டர், இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.

கடந்த 2007ல் முதல் முறையாக மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு குணமடைந்த ரெய்னா, மீண்டும் போட்டிகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த அவர், இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

இதன் காரணமாக ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். உள்நாட்டுத் தொடர்களிலும் அவர் பங்கேற்க முடியாது.

இந்திய அணிக்காக கடந்த 2018ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியதே ரெய்னாவின் கடைசி போட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!