தோக்கியோ: ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் குரோசா என்ற புயல் உருவாகியுள்ளது. அப்புயல் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் கனமழையுடன் கூடிய பயங்கர காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தோக்கியோ, நகோயா மற்றும் ஒசாகா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்தும் தடைப்பட்டது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக 222 விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் விமானப் பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். ரயில் சேவை நிறுத்தப்பட்டதாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.
ஜப்பானில் புயல்: விமான, ரயில் சேவைகள் ரத்து
15 Aug 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Aug 2019 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!