லண்டன்: இப்பருவத்தில் செல்சி காற்பந்துக் குழுவின் முதல் வெற்றியைப் பறித்தது லெஸ்டர் சிட்டி.
ஏழாவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டு மகிழ்ந்த செல்சி, எப்படியும் முதல் வெற்றியைப் பதிவு செய்து விடலாம் என்ற நம்பிக்கையோடு விளையாடியது.
இன்டிடியிடம் இருந்த பந்தைத் தட்டிப் பறித்து, மேசன் மவுண்ட் போட்ட அக்கோலைத் தொடர்ந்து லெஸ்டர் சிட்டியால் கோல் எதுவும் போட முடியவில்லை.
பெட்ரோவின் பந்து கோல் வலையைத் தொட்டுச் சென்றது.
லெஸ்டர் சிட்டியின் கிறிஸ்டியன் ஃபக்ஸ் உதைத்த பந்து கோல் வலையை நோக்கிச் செல்லாமல் தடுத்துவிட்டார் தற்காப்பு வீரர் கான்டே.
பிற்பாதி ஆட்டத்தில் விறுவிறுப்புடன் விளையாடிய லெஸ்டர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
எனவே சக வீரர்கள் இருவர் உதைத்த பந்தை இன்டிடி தலையால் முட்டி கோலாக்கினார்.
67வது நிமிடத்தில் விழுந்த அந்தக் கோல் செல்சிக்கு
பேரிடியானது.
மேலும் கோல் எதுவும் விழாத நிலையில், ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.
இரு குழுக்களும் இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், செல்சி ஒரு புள்ளியும் லெஸ்டர் இரு புள்ளிகளும் பெற்றுள்ளன.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய செல்சி நிர்வாகி லாம்பர்ட், “குழு விற்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய விஷயம்.
“இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று முழுக் கவனம் செலுத்தினோம். இனிவரும் ஆட்டங்களில் இதைவிடச் சிறப்பாக விளையாடுவோம்,” என்றார்.
இப்போட்டி சமநிலையில் முடிந்ததால், இபிஎல்லின் முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்த முதல் செல்சி நிர்வாகி எனும் மோசமான பதிவில் இருந்து தப்பினார் லாம்பார்ட்.
இபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிட்டியிடம் 4-0 என தோற்ற செல்சி, சூப்பர் கிண்ணப் போட்டியில் லிவர்பூலிடம் பெனால்டி முறையில் தோற்றது குறிப்பிடத்தக்கது.