லாவோஸிலுள்ள செங்குத்துப் பள்ளத்தாக்கிற்குள் பேருந்து ஒன்று விழுந்ததில் குறைந்தது 13 சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாக போலிசார் கூறினர்.
லுவாங் பிரபாங் நகருக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்த பேருந்தில் நாற்பதுக்கும் அதிகமான சீன சுற்றுப்பயணிகள் இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இதுவரையில் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரை இன்னும் காணவில்லை என்றும் போலிஸ் அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 31 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பேருந்தின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.