புதுடெல்லி: அனைத்துலக ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப் பாட்டில் இந்தியா உறுப்பினரானது. ரசாயன ஆயுதங்கள், தொழில் நுட்பங்கள், அணுசக்தி உள்ளிட்ட வற்றின் ஏற்றுமதியைக் கட்டுப் படுத்தும் அனைத்துலக அமைப் பான ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) இந்தியா இணைந் துள்ளது. இந்த அமைப்பில் சேர்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
எம்டிசிஆர் அமைப்பில் இந்தியா இணைந்ததன் மூலம் உயர்ரக தொழில்நுட்ப ஏவுகணை தொழில்நுட்பங்களை வாங்க முடியும். மேலும் ரஷ்யாவுடன் இணைந்து அதிக ஏவுகணை களைத் தயாரிக்கமுடியும். என்எஸ்ஜியில் இந்தியா சேர முடியாத நிலையில், இந்த அமைப்பில் இந்தியா சேர்ந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச் சியில் பிரான்ஸ், நெதர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட நாடு களின் முன்னிலையில் இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 34 உறுப்பினர்களைக் கொண்ட ஏவுகணை தொழில் கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினராக சேர இந்தியா கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தது.