இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் தாய்லாந்தில் மரணம்

இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் தாய்லாந்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது பிரக்யா பலிவால் வருடாந்திர மாநாடு ஒன்றுக்காக புக்கெட் நகருக்குச் சென்றதாக அவரது சகோதரர் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பிரக்யாவின் குடும்பத்தினரில் எவரிடமும் கடப்பிதழ் இல்லாததால் தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் சடலத்தை அவர்களால் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களுக்கு முழு ஆதரவு வழங்கவும் பிரக்யாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரவும் இந்திய வெளியுறவு அமைச்சு உறுதி அளித்திருக்கிறது.

உயிரிழந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடன் பேங்காக்கிலுள்ள இந்தியத் தூதரகம் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். அவர்களுக்குக் கடப்பிதழ்களைப் பெற்றுத் தர இந்திய அதிகாரிகள் துரிதமாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!