உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலியாக, சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த மே முதல் ஜூலை மாதம் வரை நடந்த 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ஓட்டங்கள் சேர்த்தன.
இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ஓட்டங்கள் எடுத்து சமநிலை வகித்தன.
இதனை அடுத்து இறுதிப்
போட்டியில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு அதில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தில் (ஐசிசி) இந்த முடிவுக்குக் கடும் விமர்சனம் கிளம்பியது.
இந்த நிலையில் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தில் தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது.
அதாவது ஐசிசி டி20 மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். அதேநேரத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று ஐசிசி கூறியது.