புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 227 விசைப்படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.
கோட்டைப்பட்டினத்தில் இருந்து 35 கடல்மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சிவக்குமார், 25, வீரமணி, 43, முருகன், 28, ஆகிய மூவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.