பிரிவும் கூட பல சமயங்களில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்கிறார் ஷ்ருதி ஹாசன். அந்த வகையில் தன் தந்தை கமலும் தாய் சரிகாவும் பிரிந்தது நல்லதுதான் என்று அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை கமல் ஒரு நடிகர் என்பது சிறு வயதில் தமக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வேடங்களில் வீட்டுக்கு வரும் தந்தையைப் பார்த்துத் தமக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
“ஒருநாள் புலி வேடத்தில் வருவார். மற்றொரு நாள் பெண்ணாகத் தோற்றமளிப்பார். ’இந்தியன்’ தாத்தா வேடத்திலும் காட்சி தருவார். அதையெல்லாம் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.
“பெற்றோர் இருவரும் சண்டையிட்டுப் பிரிந்தது வருத்தமாக இருந்தது. ஆனால், தினந்தோறும் சண்டை போடுவதால் வீட்டுச் சூழ்நிலை கலவரமாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச் சண்டையிடுவதை விட இருவரும் பிரிந்து வாழ்வதில் தவறில்லை என நினைத்தேன். இந்தப் பிரச்சினையில் இருவருக்கும் மத்தியில் சமாதானம் செய்யலாம் என்ற எண்ணத்தையும் மாற்றிக் கொண்டேன்,” என்று ஷ்ருதி கூறியுள்ளார்.
தற்போது பெற்றோர் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதையே பிரிவும் கூட மகிழ்ச்சி தரும் என்று தாம் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை விபத்தில் சிக்கி தந்தை கமல் உயிருக்கே போராடியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிலிருந்து தாம் நினைத்த மாதிரியே கமல் மீண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.