சென்னை: காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழு நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் போட்டியிடலாம் என்ற தமிழக அரசின் சட்டத் திருத்தம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அமல் படுத்தப்பட உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகள், தொழுநோயாளிகள் போட்டி யிட இயலாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், மாற்றுத் திறானாளிகள் பலர் உயர் கல்வித் தகுதி உடையவர்களாகவும் தகவல் தொடர்புத்திறன் கொண்டவர்க ளாகவும் உள்ளதால் நகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.