கோலாலம்பூர்: கோலாலம்பூரில் தைப்பூச பக்தர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் சந்தேகப் பேர்வழியான ஓட்டுநரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர் - சிரம்பான் நெடுஞ்சாலையில் ஆறு பக்தர்கள் மீது கார் மோதியதில் அதே இடத்தில் மூவர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் செனாவாங்கிலிருந்து பத்து மலையை நோக்கி பாத யாத்திரையாக ஆறு பக்தர்களும் சென்றபோது பிஎம்டபிள்யூ கார் மோதியது.
சம்பவ இடத்திலிருந்து உடனடியாக கார் ஓட்டுநர் தப்பி விட்டார். பிற்பகல் ஒரு மணியளவில் லேகாஸ் நெடுஞ்சாலையில் அந்தக் கருப்பு நிறக் கார் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை 7.30 மணியளவில் அவர் சரணடைந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பக்தர்கள் மீது மோதிய கார். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆன்லைன்