கிளார்க்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் திடல்தடப் போட்டி, காற்பந்துப் போட்டி வீரர்களைத் தவிர மற்ற அனைத்துக் குழுக்களின் வீரர்களும் பாராட்டு பெற்றனர். தெ.கி.ஆ விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 659 சிங்கப்பூர் வீரர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் விளையாடிய திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தெ.கி.ஆ விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் மற்றும் திடல்தடப் போட்டிகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
அனைத்துப் போட்டிகளிலும் போட்டித்திறனுடன் விளங்குவதற்கு திடல்தட வீரர்கள் திறன்மிக்கவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போட்டிகளில் மட்டும் குறைந்தது 40 தங்கப் பதக்கங்கள் உள்ளன. இந்த போட்டிகளில் நாம் அதிகமான தங்கங்கள் பெறுவதை நாம் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் திடல்தட வீரர்களும் அத்துறையைச் சார்ந்தோரும் தங்களுக்கு இடையயுள்ள கருத்துவேறுபாட்டை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் இந்தத் துறையில் சாதிப்பது மிகப்பெரிய சவாலாக நீடிக்கும் என்று சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத்தின் திடல்தட துறையின் தலைவர் ரிச்சர்ட் கார்டோன் கூறினார்.
இந்த முறை சிங்கப்பூர் திடல்தட வீரர்கள் மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளனர். கடந்த 2017ல் 2 வெள்ளிப் பதக்கங்களும் 4 வெண்கலப் பதக்கங்களும் வென்றனர் என்றார் திரு ரிச்சர்ட்.