லக்னோ: திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றவர்களின் கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் உத்தர பிரதேச மாநிலம், தனாவ்லி
அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கிப் பலியாகினர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்
சென்றுவிட்டார். இந்த விபத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.