கன்னியாகுமரி: போலிஸ் அதிகாரி வில்சன் என்பவர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இருவரால் கொல்லப்பட்டார். அவர்களது அடையாளம் இப்போது தெரிந்துள்ள நிலையில் அவர்களது இருப்பிடம் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.7 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார்.
வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகியோர் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள தாக காவல்துறையினர் அறிவித் துள்ள நிலையில் கொலையாளி களைப் போலிசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் களியக்காவிளையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.