பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் அண்மைய நாட்களாக பெய்துவரும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக நூறு பேர் வரை இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் பெய்ஜிங், ஷங்ஸி, ஹெனான், ஷாங்ஸி ஆகியவை சூழ்ந்துள்ள ஹெபெய் மாகாணத் தில் மட்டும் 24 பேர் மாண்டு விட்டதை குடிமை விவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. பருவ மழையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஹெபெய்யில் 72 பேர் வரை காணவில்லை என்று அது கூறியது. இதற்கிடையே ஹெபெய்யில் உள்ள 11 நகரங்களிலிருந்து சுமார் 123,000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். இங்கு ஏறக்குறைய 7,000 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் போக்குவரத்து, எரிசக்தி, தொலைத்தொடர்புகள் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க முடியாமல் தவிக்கும் நபர். படம்: ராய்ட்டர்ஸ்