விவசாயம், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்றவற்றை ஊக்கப்படுத்துவதற்காக திருப்பத்தூரில் இயங்கி வரும் ஒரு துணிக்கடை ரூ.2,000க்கும் அதிகமாகச் செலவிட்டு துணி வாங்கிய 600 பேரை உள்ளடக்கி அதிர்ஷ்டக்குலுக்கு நடத்தியது.
அதில் வெற்றிபெற்ற திருப்பத்தூரைச் சேர்ந்த ராமசாமி ராஜா என்பவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஜல்லிக்கட்டு காளை பரிசாகக் கிடைத்தது.
பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு திருப்பத்தூர், சிங்கம்புணரி தொகுதி திமுக எம்எல்ஏ கே ஆர் பெரிய கருப்பன் வெற்றிபெற்றவரிடம் காளையை ஒப்படைத்தார்.
படம்: தமிழக ஊடகம்