புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான ஹோமியோபதி’ என்ற தலைப்பில் உள்ள மத்திய ஆயுர்வேத அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ‘ஆர்சனிகம் ஆல்பம் 30’ என்ற மருந்தை மூன்று நாட்களுக்குத் தினமும் வெறும் வயிற்றில் ஒரு தடுப்பு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆயுர்வேத அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என இணையவாசிகள் கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.
“எந்தவொரு ஹோமியோபதி மாணவரும் அல்லது யுனானி மருத்துவ மாணவரும் பாடத்திட்டத்தில் ஏதேனும் நுண்ணுயிரியலை படித்தார்களா என்பதை அறிய விரும்புகிறேன்,” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இது உண்மையா? ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகளை இங்கு கூறப்பட்டுள்ளபடி தடுப்பு நடவடிக்கைகளாக உட்கொள்ள முடியுமா?
ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என அறியப்படாமலே ‘கொரோனா’ கிருமியைத் தடுப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது, இது எதை அடிப்படையாகக் கொண்டது என பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.