மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் செய்து பல நூறு மில்லியன் பணத்தைப் பெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனக்கூறி, பெரும் சர்ச்சையிலிருந்து அவரை விடுவித்துள்ளார் மலேசிய தலைமைச் சட்ட அதிகாரி முகமட் அஃபண்டி அலி. நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த அமெரிக்க டாலர் $681 மில்லியன் ($973 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பணம் அவருக்கு சவூதி அரச குடும்பத்தினரால் வழங்கப்பட்ட பரிசு என்பதை ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஆதாரங்களுடன் எடுத்துக்கூறினார் அவர்.
இந்த நன்கொடைக்குக் காரணம் ஏதும் தரப்படவில்லை. ஆனால் அந்தப் பணத்தில் ப-யன்படுத்தப்படாத 620 மில்லியன் அமெரிக்க டாலர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "கிடைத்த தகவல்களின்படியும் ஆதாரத்தை வைத்துப் பார்க்கும் பொழுதும் அரசு தரப்பு வழக்கறிஞரான நான் நஜிப் எந்தவிதமான குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று திருப்தி அடைந்துள்ளேன்," என்றார் தலைமைச் சட்ட அதிகாரி.