கெப்பாலா பாத்தாஸ்: மலேசியாவின் பினாங்கு மாநிலம், கெப்பாலா பாத்தாஸில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளையர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரோட்டிச் சென்ற 47 வயதுப் பெண் போதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. கார் மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததாக போலிஸ் துணை ஆணையர் நூர்சைனி முகம்மது நூர் தெரிவித்தார். கார் ஓட்டிச் சென்ற பெண்மணி நான்கு நாள் காவலில் வைக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிறன்று இதேபோல போதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மோதி தொழிலக ஊழியர் ஒருவர் மாண்டார்; அவரின் மனைவி படுகாயமடைந்தார்.