பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கீழவை சபாநாயகரிடம் சொத்து விவரங்களை வெளியிடாத எம்பிக்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனால் இந்த அபராதத் தொகை 100,000 ரிங்கிட் வரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
அபராதத் தொகை மட்டுமல்லாமல் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறினால் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
அபராதம் அதிகரிக்கும் திட்டத்தை நாடாளுமன்ற நாயகர் முஹமட் அரிஃப் முஹமட் யூசோப் உறுதி செய்துள்ளார். அபராதத் தொகையை குழு விரைவில் முடிவு செய்யும் என்றும் அவர் சொன்னார். “எந்த அளவுக்கு அபராதத்தை உயர்த்தலாம் என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை,” என்றார் அவர்.