சென்னை: பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலிசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர், தங்கள் பையில் கத்திகளை மறைத்து வைத்திருப்பதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலிசார் பேருந்து நிலையத்துக்கு விரைந்தனர். அவர்களைக் கண்டதும் மாணவர்கள் சிதறி ஓட, விடாமல் விரட்டிச் சென்று ஆறு பேரை பிடித்தனர் போலிசார். அவர்களில் மூவரிடம் மட்டுமே கத்தி இருந்தது. மூவரைக் கைது செய்த போலிசார், மற்ற மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்
31 Jul 2016 06:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Aug 2016 06:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!